பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில், விண்ணப்பிப்பற்கான கால அவகாசம் மே.30 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதால், ஜூன் 2 வரை அவகாசத்தை நீட்டிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தற்போது வரை பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 12 ஆயிரத்து 959 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!