30 people injured in the van near Ramanathapuram : Collector-consoles_injured-persons

ராமநாதபுரம் கீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் திருமணத்திற்கு பெண் நிச்சயம் செய்துவிட்டு திரும்பிய மினிவேன் கவிழ்ந்ததில் 30 பேர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ரைஸ்மில் காலனி தெருவை சேர்ந்தவர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் இன்று காலை மினி வேன் (டாடா ஏசி) வாகனத்தில் கீழக்கரைக்கு திருமணத்திற்கு பெண் நிச்சயம் செய்ய சென்றனர். வேனை ஏர்வாடியை சேர்ந்த பாலமுருகன் (வயது 35) ஓட்டி சென்றார். கீழக்கரையில் திருமண நிச்சயம் முடிந்து பிற்பகலில் திரும்பி சென்றபோது கீழக்கரை அருகே உள்ள முள்ளுவாடி பகுதியில் மினி வேன் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்தவர்களில் 9 பேர் கீழக்கரை அரசு மருத்துவமனையிலும், 17 பேர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும், ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழக்கரை போலீசார் வேன் டிரைவர் பாலமுருகனை கைது செய்து விபத்துக்குறித்து விசாரித்து வருகின்றனர்.

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் நடராஜன் நேரில் சென்று விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜவஹர்லால் உடனிருந்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!