District Employment Office, Employment Camp for Private Sector

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பு :

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 24.02.2018 அன்று பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

18 வயது முதல் 35 வயது வரையுள்ள 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்காக மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேற்கண்ட தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் பங்கேற்று பயன்பெறலாம், என தெரிவிக்கப்பபட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!