DMK condemns bus tariff hike in Ramanathapuram The coalition parties demonstrated

ராமநாதபுரத்தில் பஸ் கட்டண உயர்வு ஏற்படுத்திய தமிழக அரசை கண்டித்து தி.மு.க., மற்றும் கக்ஷட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம் அரண்மனை முன்பாக தி.மு.க., மற்றும் கக்ஷட்டணி கட்சி சார்பில்நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் திவாகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமுர்த்தி, முன்னாள் எம்.பி.,பவானி ராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் இன்பா ரகு, முன்னாள் எம்.எல்ஏ முருகவேல், முன்னாள் கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், நகர் செயலாளர் கார்மேகம், சிறப்பு அழைப்பாளர் சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் நாராயணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், நகர் தலைவர் கோபி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் குணா, இந்திய யுனியன் முஸ்லீம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் வருசை முகம்மது, இந்திய கம்யு மாவட்ட செயலாளர் ராஜன், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சிவகுமார், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் சத்யராஜ், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி அன்வர்அலி உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற கோரியும் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!