Fog in many places in the Perambalur district! Pleasant weather !!

பெரம்பலூர் மாவட்டத்தின், எசனை, அனுக்கூர், வேப்பந்தட்டை, அரசலூர், ஈச்சங்காடு உள்ளிட்ட பல இடங்களில், இன்று காலை 6.30 க்கு தொடங்கி 8.30 மணி வரை வெண் பனி மூட்டம் படர்ந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கினர். நள்ளிரவு முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை காலை வேளைக்கு பிறகு பனிமூட்டத்தால் பூமி குளிரத் தொடங்கியது.

அதனால், பொதுமக்கள் இதமான குளிரை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர். காலை 9 மணிக்கு பின்னர் வழக்கமான வானிலை சூரிய வெளிச்சத்துடன் தொடங்கியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!