Fog in Perambalur! Pleasant weather !!
பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில், இன்று மாலை 4.30 மணி அளவில் பனி மூட்டம் படர்ந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கினர். மதியம் முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை மாலை வேளைக்கு பிறகு பனிமூட்டத்தால் பூமி குளிரத் தொடங்கியது.
அதனால், பொதுமக்கள் இதமான குளிரை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர்.