Government doctors condemned demanding 50% reservation in post graduation

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று மாலை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வளாகம் முன்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் தென்மண்டல செயலாளர் டாக்டர் கார்த்தீஸ்வரன் தலைமை வகித்தார்.

தென்மண்டல தலைவர் டாக்டர் அகிலன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் ஏற்கனவே பின்பற்றியபடி அனைத்து அரசு சுகாதார நிலையங்களுக்கும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் பெற வலியுறுத்தியும், மாநில அரசில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட தலைவர் டாக்டர் சுல்தான் ராஜா, மாவட்ட செயலாளர் (பரமக்குடி) டாக்டர் மணிகண்டன் உட்பட 50க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!