Ramanathapuram in SMK Administrators Consultation Meeting

ராமநாதபுரத்தில் சமத்துவ மக்கள் கழக 3ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் நடந்தது.

சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். துணை பொது செயலாளர் இளஞ்சேரன், தலைமை கழக பேச்சாளர் வில்லியம்ஸ், மாவட்ட அவைத்தலைவர் ஜெகநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் சக்திவேல், ஷேக்அப்துல்லா, ஒன்றிய செயலாளர்கள் நம்பிராஜன், ராஜா, பால்சாமி, நகர் செயலாளர் அசோக், உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழக அரசு பஸ் கட்டண உயர்த்தியது சாமணிய மக்களை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்திட வேண்டும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 108 பேரையும் சிறை பிடிக்கப்பட்ட 165 படகுகளையும் மீட்க மத்திய அரசு முலம் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!