Revenue and police are paying tribute to the IPS officer who died in a heart attack in Jammu and Kashmir

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த எஸ்.ஆர்.சாமுவேல். இவர் ஜம்மு காஸ்மீரில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பணியின் போது மாரடைப்பில் இறந்த ஐபிஎஸ் அதிகாரி சாமுவேலின் உடல் அவரது சொந்த ஊரான பரமக்குடிக்கு இன்று மாலை கொண்டு வரப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன் மரணமடைந்த ஜம்மு காஸ்மீர் கேடர் அதிகாரி எஸ்.ஆர்.சாமுவேல். ஐ.பி.எஸ். உடலுக்கு அவரது இல்லத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வின் போது தென் மண்டல காவல் துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவ், டிஐஜிக்கள் (ராமநாதபுரம்) என்.காமினி, (மதுரை) பிரதீப்குமார், ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா, பரமக்குடி சப்கலெக்டர் விஷ்ணு சந்திரன் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் டோங்ரே உட்பட பலர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!