The demonstration was held at Ramanathapuram in denouncing the Secretary of the AIADMK

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை ஒருமையில் திட்டிய அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல்ஜாமியா என்பவரை கடந்த 20ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று வெளியே வந்தபோது அதிமுக சாயல்குடி ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ் தரக்குறைவாக ஒருமையில் திட்டியுள்ளார்.

இச்செயலை கண்டித்து ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி அலுவலர்கள் சங்கம் வட்டாரக்கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய கமிஷனர் மாறன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜூ, விஜயகுமார், ராமநாதன், கதிரவன், சமுக நல அலுவலர் சுந்தரம்பாள் உட்பட பலரும் ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ் செயலை கண்டித்தும் அவர்மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கேகாரியும் பேசினர். ஊராட்சி செயலர் செந்தில் நன்றி தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!