Tomorrow AMMA Scheme camp in Perambalur district: Collector’s notice
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:
வரும் ஆக. 3 அன்று பெரம்பலூர் வட்டத்தில் துறைமங்கலம், வேப்பந்தட்டை வட்டத்தில் தழுதாழை, குன்னம் வட்டத்தில் ஒகளூர் (மேற்கு) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் சிறுவயலூர் ஆகிய வருவாய் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடை பெற உள்ளது.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.