இலங்கையின் யாழ் சுவையுடன் ஆடிக்கூழ் செய்வது எப்படி?

schedule
2018-07-12 | 12:28h
update
2026-04-13 | 12:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

 


Advertisement

தேவையான பொருட்கள் :

அரிசி – 1/2 சுண்டு
வறுத்த பயறு – 100 கிராம்.
கற்கண்டு – 200 கிராம்
தேங்காய் – 1
உப்பு – அளவிற்கு
தண்ணீர் – 14 தம்ளர்

* செய்முறை :
அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்தரித்துக் கொள்க .

* ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாலை பிழிந்தெடுத்து , இதில் 1/2 தம்ளர் முதல் பாலை எடுத்து வேறாக வைக்கவும் .

*பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பனங்கு மாவை எடுத்து பாத்திரத்திலிட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத் தம்ளர் முதல் பாலை சிறிது சிறிதாக விட்டு இடியப்ப மா பதத்திற்கு நன்றாக அடித்துக் குழைத்து , சிறு சிறு துண்டுகளாக உருட்டி மெதுவாக தட்டி வைத்துக் கொள்க .

* பின்பு பானையில் 10 தம்ளர் தண்ணீரை விட்டு கொதித்த பின்பு வறுத்த பயறை கழுவிப் போட்டு அவியவிடவும் . பயறு முக்கல் பதமாக அவிந்து வரும் பொழுது உருட்டி வைத்துள்ள மா உருண்டைகளை ஒவொன்றாக போட்டு அவிய விடவும் .

* பின்பு மிகுதியாக உள்ள மாவில் பாலை விட்டு கரைத்துக் கொள்க

* கொத்தி நீரில் போட்ட மா உருண்டைகள் அவிந்ததும் கற்கண்டையும் கரைத்து வைத்துள்ள மா கரைசலையும் சேர்த்து கரண்டியால் நன்கு இடை விடாது துலாவி காய்ச்சவும் . கலவை ஓரளவு தடிக்க தொடங்கியதும் உப்பும் தேங்காய் சொட்டும் கலந்து இறக்கி சூட்டுடனேயே பரிமாறலாம் .

* இலங்கையில் யாழ்ப்பகுதி மக்களது பாரம்பரிய உணவாக விளங்குவது ஆடிக்கூழ் ஆகும். இன்று இது போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்களை செய்யவும், சுவைக்கவும் பலருக்கு நேரமில்லை. யாழ் மக்களிடையே இந்த பாரம்பரிய ஆடிக்கூழ் பிரபல்யமானது. தற்போது சுற்றுலா பயணிகளும் பிடித்தமாக உண்கிறார்கள்.

 

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2026 - 12:22:13
Privacy-Data & cookie usage: