பெரம்பலூர் : உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 11ந்தேதி நடைபெறவுள்ளது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம்

பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ப.இராமசாமி தலைமையிலும்,

வேப்பந்தட்டை அருகே உள்ள அனுக்கூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ப.கள்ளபிரான் தலைமையிலும்,

குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமத்தில் இணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) ஆர்.கிருஷ்ணசாமி தலைமையிலும்,

ஆலத்தூர் அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் (மற்றும்) பழங்குடியினர் நல அலுவலர் ஜெ.ராஜேந்திரன் தலைமையிலும் வரும் 11ந்தேதி சனிக்கிழமை காலை 10.00 மணி க்கு நடைபெற உள்ளது.

எனவே மேற்கண்ட ஊர்களில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!