பெரம்பலூர்: மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம்
பெரம்பலூர் வட்டம், களரம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ராமசாமி தலைமையிலும்,
வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கள்ளபிரான் தலைமையிலும்,
குன்னம் வட்டம், நல்லறிக்கை கிராமத்தில் பொது விநியோகத்திட்ட இணைப்பதிவாளர் ஆர். கிருஷ்ணசாமி தலைமையிலும்,
ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் (மற்றும்) பழங்குடியினர் நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலும் 13.06.2015 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம். என தெரிவித்துள்ளார்.