பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம்
பெரம்பலூர் வட்டம், விளாமுத்தூர் கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) பாலகிருஷ்ணன் தலைமையிலும்,
வேப்பந்தட்டை வட்டம் மங்கலம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கள்ளபிரான் தலைமையிலும்,
குன்னம் வட்டம் கொளப்பாடி கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலும்,
ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தில் துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) கிருஷ்ணசாமி தலைமையிலும் வரும் நவ.14 ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளை தெரிவித்து பயனடைய வேண்டும், என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது, தெரிவித்துள்ளார்.