கூட்டத்தில் சமீபத்தில் உயிரிழந்த வணிகர்களுக்கும், மழையினால் உயிரிழந்தவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் வரும் மே மாதம் நடைபெரும் மாநில மாநாட்டில் குடும்பத்தோடு கலந்து கொள்வது, உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட பொருப்பாளர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். கூட்டத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொருளாளர் ரமேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் செயலாளர் ராஜா நன்றி கூறினார்.