தகவலறிந்த அவரது உறவினர்கள் சுகன்யாவை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சுகன்யா இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் குன்னம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளில் சுகன்யா இறந்ததால் வரதட்சனை கொடுமை காரணமாக இறந்தாரா? என சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விசாரணை நடத்தி வருகிறார்.