பெரம்பலூர்: குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 348 பேர்கலந்துகொண்டனர் – நாளை மாலை முடிவுகளை வட்டடார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பார்க்கும் வசதி மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில், குரூப் 1, 2 மற்றும் 4 பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பணிக்கு தேர்வாகி பணியில் உள்ளனர். இது தவிர தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2 பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு அறிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குரூப்-2 பணிக்கான பொதுத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர;வில் பங்கேற்க 375 நபர்கள் பதிவு செய்திருந்தனர். பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (31.10.2015) நடத்தப்பட்ட தேர்வில் 348 நபர்கள் கலந்து கொண்டனர். குரூப் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த நபர்களால் தயாரிக்கப்பட்ட 200 கேள்விகளுடன் காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வுக்கான முடிவுகளை நாளை (1.11.2015) மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட மைய நூலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பார்க்கும் வசதி மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது. மேலும், எப்போது வகுப்புகள் தொடங்கும் என்ற விபரமும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும்.

தேர்வு மையத்திற்கு வந்த உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் எஸ்.கோபாலகிருஷ்ணன் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து சூப்பர் 30 சிறப்பு பயிற்சி வகுப்பில் இருந்த மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய முதன்மைச் செயலளர் மிகச்சிறப்பு வாய்ந்த இந்த சூப்பர் 30 வகுப்பில் இடம்பெற்றுள்ள நீங்கள் வருங்காலத்தில் சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்களாக உருவாக மனதார வாழ்த்துகின்றேன் என்றார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது, சார் ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி ஆகியோர்உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!