20151012gdp
பெரம்பலூர்: திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் இன்று நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், திட்டம் நடைபெற்று வரும் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அம்மாபாளையம் கிராம ஊராட்சியை சேர்ந்த கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட இலக்கு மக்களுக்கு ஆதார நிதியாக ஒரு குழுவிற்கு ரூ. 15,000 ம், 2 நலிவுற்ற நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும், 5 மாற்றுத் திறனாளி நபர்களுக்கும் தனிநபர் கடனாக தலா ரூ. 10 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.85,000 ற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது வழங்கினார்.

அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!