2012-2013 ஆம் ஆண்டிற்காக கொடிநாள் வசூல் இலக்கை எய்தியதைப்பராட்டி மேதகு தமிழக ஆளுநர் முனைவர்.கே.ரோசையா வழங்கிய பாராட்டுச் சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமதுவிடம் வழங்கப்பட்டது.
அந்தவகையில் 2012-2013 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் இலக்காக ரூ.7.54 லட்சம நிர்ணயிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில் ஒரு வருடத்தில் ரூ.8 லட்சத்து 69 ஆயித்து 115 கொடிநாள் நிதியாக திரட்டி வழங்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்தியதற்காக மாவட்ட ஆட்சியரைப் பாராட்டி மேதகு தமிழக ஆளுநர் முனைவர் கே.ரோசையா பாராட்டுச்சான்றிதழை வழங்கியுள்ளார்கள்.
அந்த பாராட்டுச்சான்றிதழை முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் உதவி இயக்குநர் கர்னல்.கே.செந்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் .தரேஸ் அஹமதுவிடம் இன்று வழங்கினார்.