தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் தொண்டர்கள் கோவிலில் வெள்ளி தேரை இழுத்தனர்.

schedule
2015-08-23 | 18:10h
update
2026-06-16 | 22:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் துரை.காமராஜ் தலைமையில், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் பொன்.சாமிதுரை முன்னிலையில் ஒன்றியத்தில் பாடாலூர், இரூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், போன்ற பல கிராமங்களில் கட்சிக் கொடி ஏற்றி நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Advertisement

அதனை தொடர்ந்து செட்டிக்குளம் பாலதண்டபானி முருகன் கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிரதம் தேர் இழுக்கபட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வாசுரவி, துரை.சிவாஐயப்பன், மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.கண்ணுசாமி,, செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜ், பொதுகுழு உறுப்பினர் ரவிக்குமார், கேப்டன் மன்ற செயலாளர் தவசிஅன்பழகன், மாவட்ட மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கிளைகழக நிர்வாகிகள் முத்துவேல்,பச்சமுத்து,சுரேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 22:53:13
Privacy-Data & cookie usage: