பெரம்பலூரில் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

schedule
2015-08-10 | 16:01h
update
2026-06-16 | 16:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தக் கோரி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

Advertisement

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுசெயலர் டி. பாஸ்கரன், நகரத் தலைவர் குரு. ராஜேஷ், ஒன்றிய தலைவர்கள் பாலவெங்கடேஷ், தனபால், சீனிவாசன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி வணிக பிரிவு மாநிலத் தலைவர் திருமலை, தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம். சிவசுப்ரமணியம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் சிவசங்கர், உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 16:21:08
Privacy-Data & cookie usage: