தமிழக (மாநில) அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில் நீளம் தாண்டுதல் பிரிவில் முதலிடம் பிடித்த ஆயுதப்படை காவலர் இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது, சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
மேலும், வருகின்ற மார்ச் மாதம் கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகளப் போட்டியிலும், ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் நடைபெற உள்ள ஏசியன் மாஸ்டர்ஸ் தடகளப்போட்டியிலும் கலந்து கொள்ள தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.