பெரம்பலூர் அருகே ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம் : ஆட்சியர் உத்தரவு

schedule
2015-12-28 | 15:50h
update
2026-04-22 | 07:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள து. களத்தூர் ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது உத்தரவிட்டார் .

Advertisement

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட து. களத்தூர் ஊராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்புக்கு சுமார் வரை இருமடங்கு வரி வசூல், தொகுப்பு வீட்டுக்கு லஞ்சம், குடிநீர் தொட்டி அமைப்பதில் மோசடியில் ஈடுபட்டதாக து.களத்தூர் ஊராட்சித் தலைவர் சவுந்தரி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் எழுந்தது. மேலும், இதுகுறித்து, அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மாவட்ட ஆட்சியர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இந்த புகார் மீது விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, ஊராட்சித் தலைவர் சவுந்தரி கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 07:45:28
Privacy-Data & cookie usage: