பெரம்பலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 24 கி.மீ. சாலை, ரூ.64 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இச்சாலை அகலப்படுத்தும் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டால் பெரம்பலூர் மற்றும் அரியலூர் பகுதிகள் முக்கிய தொழில் மற்றும் வர்த்தக மையங்களாக மாறுவதுடன், அப்பகுதிகள் தொழில் வளர்ச்சி பெறும். இந்த சாலையானது முக்கிய கோவில் நகரங்களான தஞ்சாவூர், திருவையாறு, மதுரை, சிவகங்கை, திருவாடானை, காளையார்கோவில் ஆகியவற்றை பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கும் சாலையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.