In Perambalur Rover College, Central Zone scale mathematical model Exam: 5414 students wrote
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி கணிதத்தேர்வு இன்று பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி, ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து மாநில அளவிலான பிளஸ்2 மாணவர்களுக்கான இன்று காலை 10.00 மணிக்கு மதியம் 1.15 வரை நடைபெற்றது. 5வது ஆண்டாக நடத்தப்பட்டது,
இத்தேர்வினை பெரம்பலூரை சுற்றி உள்ள அரியலூர், கடலூர், விழுப்புரம், சேலம், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை என 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 5414 பிளஸ்2 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
மாணவர்கள் தங்களை பொதுத்தேர்விற்கு உரிய வகையில் தயார் செய்து கொள்ள ஏதுவாக அமையும் என்றும், இந்தத் தேர்வில் பங்கேற்கும் நபர்களுக்கு கணித வினாவிடை புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது, அனைத்து முக்கிய வழிதடங்களிலும் மாணவர்கள் வந்து செல்ல இலவச பேருந்து, உணவு வசதி, தங்குமிடம் தேவைப்படுவேர்களுக்கு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.