பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஜுலை 30ம் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடக்க உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமாக நீர்பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.
விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என பெரம்பலூர் ஆட்சியர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.