பெரம்பலுார் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மலையாளப்பட்டியில் சின்னமுட்லு அணை கட்ட வேண்டும், விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை மத்திய, அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சின்ராசு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார். முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் நேர்முக அலுவலர் மாரிமுத்துவிடம் மனு கொடுத்தனர்.