Muthukumar

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் இரத்த வங்கிக்காக இரத்த தான முகாம் பெரம்பலூரில் நாளை மறுநாள் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் இரத்த அழுத்தம், இரத்த வகை இலவசமாக அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கமலஹாசன் நற்பணி இயக்கம் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையின் இரத்த வங்கியில் போதுமான இரத்தம் போதுமான கையிருப்பு இல்லாமல் உள்ளது.

இதனால், அரசு மருத்துவமனை சார்பாக பல்வேறு குருதி கொடை செய்யும் தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகளிடமும், நற்பணி, ரசிகர் மன்றங்களிலும் ரத்த தானம் செய்வோரை அனுப்பும் படியும், இரத்த தானம் செய்து பல உயிர்களை ஆபத்துக்களில் பாதுகாக்க உதவும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனை ஏற்று, பெரம்பலூர் மாவட்ட கமலஹாசன் நற்பணி இயக்கம், மற்றும் பிரண்ட்ஸ் குரூப் டிரஸ்ட் இணைந்து நடைபெற உள்ள நாட்டின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாமை நாளை மறுநாள் ஜுன் 28 ஆம் தேதி நடத்துகிறது.

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்ரீராமக்கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்படும் இந்த இரத்ததான முகாமில் தானமாகப் பெறப்படும் இரத்தம் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துமனைியன் குருதி வங்கிக்கு வழங்கப்பட உள்ளது என்றும்,

இந்த இரத்த தான முகாமில் கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் மட்டுமின்றி அனைத்து ரசிகர் மன்றத்தினர், தன்னார்வலர்கள், இளம் பெண்கள் பலரும் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கலாம் என்றும்,

இரத்த தானம் செய்வோருக்கு அரசின் சான்றிதழ் குருதி கொடை வள்ளல் என்ற சான்றிதழும் வழங்கப்படும் என்றும்,

முகாமிற்கு வருகை தரும் அனைவருக்கும் கட்டணமின்றி இலவசமாக இரத்த அழுத்தம், இரத்த வகை இலவசமாக அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கமலஹாசன் நற்பணி இயக்கம் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!