பெரம்பலூர்:

சம்பவம்:1;

பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் விஸ்வநாதன்,31, இவருக்கு சுமதி(25) என்ற பெண்ணுடன் திருமணமாகி ரியா (2) மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு சென்ற சுமதி மீண்டும் கணவர் வீட்டுக்கு வர மறுத்தாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த விஸ்வாதன் நேற்று இரவு 9.30 மணியளவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து விஸ்வநாதனின் அம்மா காசியம்மாள் (60) கொடுத்த புகாரின்பேரில் எஸ்.ஐ., சுப்புலட்சுமி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

சம்பவம் : 2;

பெரம்பலூர் அருகே உள்ள தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி மகன் ஆரோக்கியசாமி(58), இவருக்கு நான்கு சகோதரர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பூர்வீக சொத்தை பிரிப்பதில் ஆரோக்கியசாமிக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த ஆரோக்கியசாமி நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
தகவலறிந்த இவரது உறவினர்கள் ஆரோக்கியசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆரோக்கியசாமி நேற்று இரவு 10.50 மணியளவில் இறந்தார்.

இது குறித்து ஆரோக்கியசாமியின் மனைவி ஆரோக்கியமேரி கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் எஸ்.எஸ்.ஐ., சண்முகம் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!