பெரம்பலூர்: உலக இளைஞர் திறனறிவு தினத்தையொட்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சேர்க்கைக்கு பதிவு செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி பிளம்பர், பெயிண்டர், கொத்தனார், எலெக்ட்ரீசியன், தையல், பியூட்டிசியன் ஆகிய பயிற்களுக்கு கல்வித்தகுதியான ஐந்தாம் வகுப்பும், சில்லறை வர்த்தகத்தில் உதவியாளர் பயிற்சி, ஓட்டுநர், ஏ.சி மெக்கானிக் போன்றவற்றிக்கு 8-ம் வகுப்பும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் நெட்ஓர்க் இஞ்சினியர், செல்போன் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்களில் காவலர் பணி மற்றும் வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட 34 வகையான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சேர்க்கைகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள பதிவாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு என ஆட்சியர் (பொ) மீனாட்சி தெரிவித்துள்ளார்.