பெரம்பலூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி மதியம் 3.30 மணியளவில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மீனாட்சி தலைமையில் நடக்க உள்ளது.
இக்கூட்டத்தில் எரிவாயு உருளை முகவர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு உருளை சம்மந்தமாக குறைகள் இருப்பின் மேற்படி கூட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வினியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம் என பெரம்பலூர் ஆட்சியர் டாக்டர்.தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.