பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் எளம்பலூரில் தமிழக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் எளம்பலூரில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், தமிழக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சி மற்றும் வீடியோ படக்காட்சி (09.09.2015) அன்று சிறப்பாக நடத்தப்பட்டது. இக்கண்காட்சியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில்; மாண்புமிகு தமிழக முதலமைச்சர் சிறப்புத்திட்ங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் பெரியஅளவில் மக்களை கவரும் வகையில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.
மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அமைச்சர், பெருமக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினாகள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த புகைப்படக்கண்காட்சியை சட்டமன்ற உறுப்பினர; இரா.தமிழ்செல்வன் துவக்கி வைத்து பார்வையிட்டு தமிழக முதலமைச்சர் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும் என தெவித்தார்.
இக்கண்காட்சியினை 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இக்கண்காட்சிகள் தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசின் சாதனைகளையும், பல்வேறு வகையான நலத்திட்டங்களையும், பொதுமக்கள் அறிந்து கொள்ளுவதற்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக இக்கண்காட்சியை பார்வையிட்ட எளம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கருத்து தெரிவித்தனர்.