Pension grievance redressal day meeting: Perambalur Collector announcement!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதுமிருப்பின் அது குறித்த மனுக்களை இரண்டு பிரதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிர்வரும் 17.11.2021 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். மேலும், 30.11.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.