கூடலூர் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 38 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சத்து 86 ஆயிரத்து 600 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி வழங்கினார்.

ஆலத்தூர் வட்டம் கூடலூர் ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மீனாட்சி தலைமையில் இன்று (15.07.2015) மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முகாமில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு திருமண உதவித்தெகைக்கான காசோலையையும், 2 நபர்களுக்கு இயற்கைமரண உதவித்தொகையாக தலா ரூ.25,000 க்கான காசோலைகளையும், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரு1,20,000 க்கான காசோலையையும்,

3 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 14 நபர்களுக்கு பட்டா மாற்ற ஆணைகளையும், வேளாண்மைதுறையின் மூலமாக 3 நபர்களுக்கு ரூ.3,600 மதிப்பிலான வேளாண் இடுபொருட்களையும், புதுவாழ்வுத்திட்டத்தின் மூலமாக 8 நபர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்காக ரூ.8,00,000 மதிப்பிலான காசோலைகளையும், தனிநபர் இல்ல கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.30,000 மதிப்பிலான காசோலைகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) மீனாட்சி வழங்கினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!