பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்தும் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரசின் திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்ச்சிகள் குறித்தும் பல்வேறு புகைப்படங்கள் அடங்கிய சிறு புகைப்படக்கண்காட்சிகள் அரசின் முக்கிய விழாக்கள், பொதுமக்கள் வெகுவாக கூடும் இடங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலமாக அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும், பயனடைந்தவர்கள் குறித்தும் அந்தந்த பகுதி மக்கள் அறிந்து கொள்ளவும், திட்டங்கள் குறித்து விளக்கம் பெறவும், பொதுமக்களிடையே அத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உண்டாக்கவும் எளிதாக இருக்கிறது.
அதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி 14.08.2015 அன்று பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.
இச்சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்புத்திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் தி;ட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் பெரியஅளவில் மக்களை கவரும் வகையில் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்ட புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் பெற்றனர்.
தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விளக்கம் அளித்தனர்.
இப்புகைப்பட கண்காட்சியினை அதன் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பலதரப்பட்ட மக்களும், கோவலுக்கு வந்திருந்த வெளியூர் மக்களும் இப்புகைப்பட கண்காட்சியினை ஆர்வமுடன் பார்வையிட்டு, தமிழக முதலமைச்சர் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் பயனள்ளதாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துச்சென்றனர்.