பெரம்பலூர் : தமிழக முதலமைச்சரின் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் வைத்திலிங்கம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்கப்புகைப்பட புகைப்படக் கண்காட்சியையினை பார்வையிட்டார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற இச்சாதனை விளக்கப்புகைப்பட கண்காட்சியில், தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரசின் திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக்கண்காட்சிகள் அரசு நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும், பயனடைந்தவர்கள் குறித்தும் அந்தந்த பகுதி மக்கள் அறிந்து கொள்ளவும், பொதுமக்களிடையே அத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உண்டாக்கவும் எளிதாக இருக்கிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்கப்புகைப்பட புகைப்படக்கண்காட்சி நேற்று நடைபெற்றது.

சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்புத்திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, விலையில்லா சைக்கிள்; வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் பெரியஅளவில் மக்களை கவரும் வகையில் கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா (பெரம்பலூர்), சந்திரகாசி (சிதம்பரம்), சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), மணிவேல் (அரியலூர்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சகுந்தலாகோவிந்தன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் சேகர், நகராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆர்டி.ஆர். இராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், ஜெயலட்சுமிகனகராஜ், வெண்ணிலாராஜா, பேரூராட்சித்தலைவர் பாப்பம்மாள், உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!