Online access; Perambalur DMK District Secretary informed that 14,579 new members have joined the DMK

பெரம்பலூர் மாவட்டத்தில் இணைய வழிவாயிலாக திமுகவில் 14 ஆயிரத்து 579 பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்ததாவது:

திமுகவில் சார்பில் “எல்லோரும் நம்முடன்” என்ற தலைப்பில் இணைய வழியில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 5ம்தேதி வரை பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் 10 ஆயிரத்து 365 பேரும், குன்னம் சட்டசபை தொகுதியில் 4 ஆயிரத்து 214 பேரும் என மொத்தம் 14 ஆயிரத்து 579 பேர் இணையவழியில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களை மகிழ்ச்சியாக வரவேற்கிறோம்.

மேலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு அதிகளவில் உறுப்பினர்சேர்க்க திட்டமிட்டுள்ளோம். புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் கட்சி செயல்பாட்டின்படி உரிய பதவிகள் தேடிவரும், கட்சி முன்னோடிகள் புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களை அரவணைத்து சென்று தீவிரமாக கட்சி பணியில் ஈடுப்பட்டு வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்றார். பேட்டியின்போது மாநில நிர்வாகி துரைசாமி, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பெரம்பலூர் நகர செயலாளர் எம். பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!