ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சியில் அரசு மேம்படுதப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே எடுக்க கருவி இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மு.மு.க., மாவட்ட செயலாளர் ஜிப்ரி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகரமாகும். தொண்டியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தொண்டியில் உள்ள அரசு மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையமே பயன் பாட்டில் உள்ளது. தொண்டி மற்றும் சுற்றுவட்டார ஏழைஎளிய மக்களின் துயர் தீர்க்கும் மருத்துவமனையாக உள்ளது.
மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சையும் அளிக்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகள் மற்றும் கடலில் நடக்கும் விபத்துக்களுக்கும் இங்குதான் முதலுதவி அவசர சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக எக்ஸ்ரே கருவிகளில் இல்லை என்றும் அதனால் சிகிச்சைக்கு வருபவர்கள் ராமநாதபுரம், காரைக்குடி போன்ற ஊர்களுக்கு சென்று மருத்துவம் பார்க்கக்கூடிய அவலநிலையால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக எக்ஸ்ரே கருவி வழங்கி எளிய மக்கள் துயர் நீக்க வேண்டும், இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!