பெரம்பலூர்: பெரம்பலூர் வட்டத்தில் சிறுவாச்சூர், வேப்பந்தட்டை வட்டத்தில் வெங்கலம் (கி), (கிருஷ்ணாபுரம்), குன்னம் வட்டத்தில் கிழுமத்தூர் (கோவிந்தராஜபட்டினம்), ஆலத்தூர் வட்டத்தில் தேனூர் (தொட்டியப்பட்டி) ஆகிய வருவாய் கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாம்களில், பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு பதில் தெரிவிக்கப்படும். எனவே, இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என அவர் தெரிவித்துள்ளார்.