பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாளை மறுநாள் (ஜன-8) பெரம்பலூர் வட்டத்தில் லாடபுரம் (கி), வேப்பந்தட்டை வட்டத்தில் காரியானூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட வெள்ளுவாடி, குன்னம் வட்டத்தில் கீழப்புலியூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட புதூர், ஆலத்தூர் வட்டத்தில் காரை(மே) வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட புதுகுறிச்சி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும என மாவட்ட ஆட்சியரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.