Fisherman's body rescued in Panaikulam along with fireman
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் நதிபாலம் ஆற்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அழகன்குளம் செட்டிபனை சேர்ந்த கருப்பையா மகன் பாலுச்சாமி என்பவர் மீன்பிடிப்பதற்க்காக சென்றபோது இறந்துவிட்டார்.
இரண்டு நாட்களாக இராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் பணியாளர்கள் பிரேதத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் தகவலின்படி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக மமக பொருளாளர் பரக்கத்துல்லா தலைமையில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், சமூக நீதி மாவட்ட செயலாளர் பகத், பனைக்குளம் கிளை பொறுப்புக்குழு தலைவர் இர்ஃபான் மற்றும் நலீம் பொறுப்புகுழு உறுப்பினர்கள், கிளப் உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் மீனவர் சொசைட்டி தலைவர் அம்மன் கோயில் குடியிருப்பு சேர்ந்த பஞ்சவர்ணம் முழுமூச்சாக களத்தில் இறங்கினர். தீயனணப்பு துறையினருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு சடலத்தை மீட்டு பனைக்குளம் தமுமுக அவசர ஊர்தியில் இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.