பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர ஓட்டலில் மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு மற்றும் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதனகோபால் தலைமை வகித்தார். மாநில பொறுப்பாளாகள் மணி ரத்தினம் முன்னிலை வகித்து பேசினார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி மாவட்ட துணை தலைவர்களாக மணி, டாக்டர் மோகன், ராஜசேகரன், துரைராஜ், அன்பழகன், சுந்தர்ராஜ், மாவட்ட செயலாளர்களாக ராஜ்குமார், சிவாஜிமூக்கன், வக்கீல் தமிழ்ச்செல்வன், சின்னசாமி,

மாவட்ட பொதுசெயலாளராக கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளராக சரவணன், வட்டார தலைவர்களாக சுந்தர்ராஜ், செங்கமலை, சின்ராஜ், ராமசாமி, சின்னதுரை,

நகர தலைவர்களாக ஜெயராமன், ஜினாபாபு, இளங்கோவன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமத்திலும் கட்சி கொடியேற்றி அதிகளவில் உறுப்பினர் சேர்த்தல், தேர்தலுக்காக பூத் கமிட்டி துவக்குதல்,

நாரணமங்கலம் எம்ஆர்எப் லிமிடெட் நிறுவனத்தினால் 50 மெகாவாட் நிலக்கரி அடிப்படையிலான சொந்த உபயோகத்திற்கான மின் உற்பத்தி நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதை நிறுத்தம் செய்யவேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!