படவிளக்கம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்டட குழந்தை தொழிலாளர் பற்றி விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மதுசூதன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்த போது எடுத்தப்படம்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மதுசூதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 348 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம்(பொ) நேரிடையாக அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை நேரிடையாக பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் (பொ) மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையும் வகையில் பணியாற்றிட வேண்டுமென அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மதுசூதன் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, தனித்துணை ஆட்சியர் முருகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.