நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்விற்கான கட்டணத்தை வரைவோலையாகவும் ஏற்க வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடப்பாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென என்ற நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பொன்.பாண்டியன், முரளி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, பொறியியல் கலந்தாய்வு கட்டணத்தையும் வரைவோலையாகவும் செலுத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. மேலும், விண்ணப்பம் பதிவு செய்த போது என்ன முறை பின்பற்றபட்டதோ அதையே கடை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!