பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வ.களத்தூர் தர்மாம்பிகை உடனுறை தர்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகள் செய்து, கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மறுகும்பாபிஷேகம் இன்று புதன் கிழமை நடத்துவதாக கோவில் நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். அதற்கு போலீஸ் தரப்பில் கோவில் கோபுரத்தின் மீது 5 பேர் மட்டுமே ஏறவேண்டும், மங்கள இசை இசைக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தனர்.