மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கிட ரூ. 36 கோடி இலக்கீடு நிர்ணயம் : ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்

schedule
2015-08-05 | 17:56h
update
2026-04-19 | 13:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கிட ரூ. 36.00 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இலக்கினை எய்திடும் பொருட்டு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள், பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், பூலாம்பாடி, அரும்பாவூர் மற்றும் இலப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களது வங்கி சேமிப்பு, மற்றும் கடன் புத்தகம் போன்ற அனைத்து பதிவேடுகளுடன் 07.08.2015 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ள தரம் பிரித்தல் (வங்கி கடன் இணைப்பு) சிறப்பு முகாமில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

மேலும் தகவல்களுக்கு உதவி திட்ட அலுவலர்களை 9445034169, 9445034170 என்ற எண்ணில் தொடர் பு கொள்ளலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 13:59:07
Privacy-Data & cookie usage: