பெரம்பலூர்: மக்கள் சிந்தனைப் பேரவையை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மக்கள் சிந்தனைப் பேரவை தொடக்க விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுபோன்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. இந்த இயக்கத்தின் மூலம் பொதுமக்களுக்கும், அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தேவையான சேவைகள் செய்ய வேண்டும். இந்த இயக்கத்தில் இணையும் ஒவ்வொரு உறுப்பினர்களும் கிராமம் தோறும் சென்று மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
புத்தக திருவிழா நடைபெறுபோது ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் இந்த இயக்கத்தில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என பேசினார்.
விழாவில், சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன், சூப்பர் – 30 ஒருங்கிணைப்பாளர் நா. ஜெயராமன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பி. தயாளன், இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட கன்வீனர் வீ. ராதாகிருஷ்ணன், தமிழாசிரியர்கள் ராசபாண்டியன், த. மாயக்கிருஷ்ணன், சாரண இயக்க மாவட்டச் செயலர் செல்வராஜ், சமூக ஆர்வலர்கள் பாரூக், ஆர். மாதேஸ்வரன், ஆ. துரைசாமி, க. மகேஸ்குமரன், எம்.எஸ். மணிவண்ணன், சந்தனக்குமார், சுலோக்ஷனா, சுகன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!