பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 143 பயனாளிகளுக்கு ரூ.08 இலட்சத்து 16 ஆயிரத்து 806 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் (பொ) மதுசூதன் வழங்கினர்.

வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி ஊராட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் தலைமையில் இன்று மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் (பொ) மலையாளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் சுகாதாரம், நியாயவிலைக்கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கல்வி, போக்குவரத்து வசதி, 108 அவசர ஊர்தி சேவை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், தாட்கோ திட்டம், புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு சங்க நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியாக கேட்டறிந்தார்.
உங்கள் ஊருக்கு குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா, கிராம செவிலியர்கள் தவறாது தங்கள் பகுதிக்கு வந்து சுகாதாரம் குறித்த அறிவுரைகள் வழங்குகிறார்களா!,

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் சத்துணவு வழங்கப்படுகிறதா என்றும் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் (பொ) மதுசூதன் கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை நேரடியாக அழைத்து அதற்குரிய விபரங்களை கேட்டறிந்து பொது மக்களிடம் எடுத்துக் கூறினார்.

மேலும் மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கும்போது அதற்கான ஒப்புகைச்சான்றினையும் கட்டாயம் பெற வேண்டும். இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் கிராம நிர்வாக அலுவலகத்தில் தீர்வு தெரிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) தெரிவித்தார்.

இந்த முகாமில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 61 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1,47,200 க்கான காசேலைகளையும், 22 நபர்களுக்கு பட்டா மாற்ற ஆணைகளையும், 7 நபரகளுக்கு பட்டா நகல்களையும், 33 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், வேளாண்மைத்துறையின் மூலம் 10 நபர்களுக்கு ரூ.5,380 மதிப்பிலான விவசாய இடுபொருட்களையும், புது வாழ்வுத்திட்ட உதவித்தொகையாக 9 நபர்களுக்கு ரூ.69,000 க்கான காசேலைகளையும், தாட்கோ மூலம் 1 நபருக்கு ரூ1,78,567 அரசு மானியத்துடன் ரூ5,95,226 மதிப்பிலான சிறிய ரகசரக்கு வாகனத்தையும் மாவட்ட ஆட்சியர் (பொ) வழங்கினார்.

அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!