பெரம்பலூர் : திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் அஹமது தலைமையில் இன்று (28.09.2015) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 390 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவா; அவா;களிடம் நோpடையாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உhpய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர;களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
கோயம்புத்தூரில் 11.9.2015 முதல் 13.09.2015 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற 22வது மாநில வனத்துறை விளையாட்டுப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வனவர் சுப்பிரமணியன் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு போட்டிகளில தங்கப்பதக்கமும், இரண்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார்.
இதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதத்தில் இந்திய அளவிலான போட்டிகள் கர்நாடகாவில் நடைபெறவுள்ளது. அதிலும் சுப்பிரமணியன் கலந்துகொள்ள உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார்.
சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியரிடம், மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில்தான் போட்டிக்கு என்னை தயார் செய்யும் விதத்தில் ஒரு மாத காலம் பயிற்சிபெற்றேன். இந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியருக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர் அன்பரசுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று கூறினார்.
அப்போது விளையாட்டுப்போட்டிகளில் இன்னும் பல்வேறு சாதனைகளைப் படைத்து நமது நாட்டிற்கும், மாவட்டத்திற்கும், வனத்துறைக்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் வாழ்த்தினார்.